இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த 25ஆம் திகதி இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மாணவர் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவினரால் சுதுமலை பகுதியில் தமது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவில் கல்வி பயிலும் ஒன்பது மாணவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இனந்தெரியாத குழு ஒன்று மாணவர்கள் மீது வாள்வீச்சு நடத்தியுள்ளதுடன் போத்தல் மற்றும் கொட்டான்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது மாணவர் ஒருவரது கை வெட்டப்பட்டுள்ளதுடன் இன்னொரு மாணவருக்கு உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு எதிராக நாளை புதன் கிழமை வரை பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
Reviewed by NEWMANNAR
on
April 28, 2015
Rating:

No comments:
Post a Comment