அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு.-Photos



மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்பங்களுக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்கள் இன்று வெள்ளிக்கிழமை(24) மதியம் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம வருந்தினராக வடமாகாண வீதி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.

இதன் போது அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 16 தையல் இயந்திரங்களை மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும்,மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்ப பெண்கள் 16 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறித்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார்,உதவி பிரதேசச் செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு,கிராம அலுவலகர்களுக்கான நிர்வாக அலுவலகர் ராதா பெணாண்டோ,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் ,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் ஜெரோம் ஆகியோர் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.













மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on April 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.