அண்மைய செய்திகள்

recent
-

போருக்கு முகம் கொடுத்த நாங்கள் சமாதானமாக வாழ வேண்டும் என நாட்டு தலைவர்களை பார்த்து கூற விரும்புகின்றோம்-மன்னார் மறைமாவட்ட ஆயர்.-Photos


இந்த நாட்டிலே ஆண்டவர் புதியதோர் காரியத்தை செய்து ஒரு புதியதோர் அரசாங்கத்தை தந்திருப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற உயிர்ப்பு ஞாயிறு நள்ளிரவு திருப்பலியினை தலைமை தாங்கி ஒப்புக்கொடுக்கையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் தொடர்ந்து மறையுரை ஆற்றுகையில்,,,

இந்த நாட்டை ஆட்சி செய்கின்றவர்கள் தமது பேச்சிலும்,மூச்சிலும் ஒரு காரியம் செய்ய வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீமைகளில் இருந்து பலியாகாமல் இருக்க செயல்பட வேண்டும்.பொறுப்புள்ளவர்களாக பொறுப்புக்கூற வேண்டும்.


இந்த நாட்டில் ஒப்புறவையும்,இணக்கத்தையும் ஏற்படுத்தி சமாதானத்தை கொண்டுவரும் எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே இப்படிப்பட்ட நேரத்தில் நம் நாட்டை ஆட்சி செய்கின்றவர்கள் தொடர்ந்தும் தமது ஆட்சியை கொண்டிருந்து இந்த சின்னஞ்சிறிய நாட்டை பாதுகாக்க வேண்டும்.

போருக்கு முகம் கொடுத்த நாங்கள் சமாதானமாக வாழ வேண்டும் என நாட்டு தலைவர்களை பார்த்து கூற விரும்புகின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் தனது உரையில் தெரிவித்தார்.




















போருக்கு முகம் கொடுத்த நாங்கள் சமாதானமாக வாழ வேண்டும் என நாட்டு தலைவர்களை பார்த்து கூற விரும்புகின்றோம்-மன்னார் மறைமாவட்ட ஆயர்.-Photos Reviewed by NEWMANNAR on April 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.