அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் நடப்பது என்ன???மக்கள் பணியை உதாசீனம் செய்யும் வைத்தியர்.-Photos



மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையினால் தொடர்ந்தும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரு வைத்தியர்கள் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக வைத்தியர் ஆர்.திலிபன் மற்றும் மேலும் ஒரு வைத்தியர் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியர் ஆர்.திலிபன் தனது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளுகின்ற போதும் மற்றைய வைத்தியர் உரிய முறையில் கடமையை மேற்கொள்ளாது இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இடம் பெறுவதாகவும்,வைத்தியர்கள் இல்லாத நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் நோயாளர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இறப்பு நிகழ்ந்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வைத்தியர் திலிபன் அவர்களின் விடுமுறை நேரத்தில் கடமையில் இருக்க வேண்டிய மற்றைய வைத்தியர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் இரவு நேரங்களில் வைத்தியசாலை விடுதியில் நிற்பது இல்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் நீண்ட நேரம் வைத்திய சாலையில் வைத்தியருக்காக காத்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் நடப்பது என்ன???மக்கள் பணியை உதாசீனம் செய்யும் வைத்தியர்.-Photos Reviewed by NEWMANNAR on April 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.