அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் குறைபாடுகளை சீர் செய்ய கோரிக்கை.



மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையங்களின் குறைபாடுகளை சீர் செய்யுமாறு கோரி பெற்றோர் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் நகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மேற்படி விடயம் தொடர்பாக மன்னார் நகர எல்லைக்குள் அதிகளவான தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவது யாவரும் அறிந்ததே.

இந்த கல்வி நிலையங்களினால் மாணவர்கள் பெரும் பயனைப் பெற்று வருகின்றனர். பல மாணவர்கள் இந்த தனியார் கல்வி நிலையங்களை நம்பியே கல்வி கற்று வருவதுடன் பல மாணவர்கள் தூர இடங்களிலும் இருந்து இங்கு வந்து கல்வி கற்று வருகின்றனர்.

அந்த வகையிலே இந்த கல்வி நிலையங்களை நடாத்துபவர்களுக்கு எமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டிய தேவையும் உள்ளது.

இருந்த போதும் இந்த கல்வி நிலையங்களில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுவதாக பல பெற்றோர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதில் மிக முக்கிய விடயமாக பல தனியார் கல்வி நிலையங்களில் குடிநீர் வசதியும், மலசல கூட வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே தங்களது சபையானது கல்விக்கு முக்கியத்தவமளித்து செயற்பட்டு வரும் இவ் நல்ல வேளையில் நகர சபைக்குற்பட்ட கல்வி நிலையங்களை பார்வையிட்டு இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தங்கள் சபையூடாக நடவடிக்கை எடுக்குமாறு பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ச.மைக்கல் கொலின்
98/37,பெரியகமம்
மன்னார்
மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் குறைபாடுகளை சீர் செய்ய கோரிக்கை. Reviewed by NEWMANNAR on April 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.