மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் 75 ஆவது பிறந்த தினமாகிய எதிர்வரும் 16 ஆம் திகதி மன்னார் ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலய திறப்பு விழா-Photos
மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் நற்கருணை நாதர் ஆலய திறப்பு விழா மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களின் 75 வது பிறந்த தினமாகிய எதிர்வரும் 16 ஆம் திகதி(16-04-2015) வியாழக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணிக்கு இறை பிரசன்னத்தில் வடக்கு,கிழக்கு மறைமாவட்ட ஆயர்கள் ஒன்றினைந்து அபிஷேகம் செய்து கூட்டுத்திருப்பலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆகியோர் இணைந்து ஆலையத்தை திறந்து வைத்து திருப்பலியினை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் 75 ஆவது பிறந்த தினமாகிய எதிர்வரும் 16 ஆம் திகதி மன்னார் ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலய திறப்பு விழா-Photos
Reviewed by NEWMANNAR
on
April 11, 2015
Rating:



No comments:
Post a Comment