சம்பூர் காணி மீள்குடியேற்றத்துக்காக ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளது
முதலீட்டு சபையினால் முதலீட்டு திட்டம் ஒன்றுக்காக கையகப்படுத்தப்பட்டிருந்த சம்பூரில் உள்ள காணிப்பகுதிக்கான உடன்படிக்கை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரத்துச்செய்யப்பட்டது
இதனை ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி பத்திரத்தில் ஜனாதிபதி நேற்று மாலை கைச்சாத்திட்டார்.
இதனையடுத்து குறித்து காணி இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் கடந்த அரசாங்கத்தினால் கையக்கப்படுத்தப்பட்டிருந்த சம்பூரின் காணி தற்போதைய அரசாங்கத்தினால் மீள்குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்
சம்பூர் காணி மீள்குடியேற்றத்துக்காக ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளது
Reviewed by Admin
on
May 08, 2015
Rating:
Reviewed by Admin
on
May 08, 2015
Rating:


No comments:
Post a Comment