அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்த எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக பல்வேறு தரப்பினர் தகவல்களை வெளியிட்டிருந்தனர். விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும் குறிப்பிட்டிருந்தனர். 

எனினும் இலங்கையில் எரிபொருள் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிடமே காணப்படுகின்றது. கிரமமான விலைப்பொறிமுறைமை ஒன்று எரிபொருள் துறைக்கு அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. நுகர்வோர் வெளிப்படைத்தன்மையுடன் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

 இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள் முடியாது எனவும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு Reviewed by Admin on May 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.