1000 சம்பள அதிகரிப்பு: முதலாளிமார் சம்மேளனத்தினால் நிராகரிப்பு
கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 சம்பள அதிகரிப்பு கோரிக்கையானது முதலாளிமார் சம்மேளனத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதோடு அடுத்தக்கட்ட பேச்சுவார்தையானது திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்புரி வி;டயங்களை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாத நடுபகுதியில் முதலாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எந்த ஒரு முடிவும் எட்டப்பட்டிருக்காத நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று ராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்பேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
1000 சம்பள அதிகரிப்பு: முதலாளிமார் சம்மேளனத்தினால் நிராகரிப்பு
Reviewed by Author
on
May 18, 2015
Rating:
Reviewed by Author
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment