மன்னாரில் பாடசாலைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-Photos
வடமாகாண  மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகரில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடத்தை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை,மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை,மன்- புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளுக்கு முன்பாகவும் அமைக்கப்பட்ட குறித்த பயணிகள் தரிப்பிடமே வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பயணிகள் தரிப்பிடத்தை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுடன் இணைந்து வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் நகர சபையின் முன்னால் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபையின் முன்னால் உறுப்பினர் இ.குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் முன்னால் தலைவர் அன்புராஜ் லெம்பேட், பாடசாலைகளின் அதிபர்கள்,அருட்தந்தையர்கள் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாடசாலைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
May 19, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
May 19, 2015
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment