அண்மைய செய்திகள்

recent
-

வெளியேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ் : சென்னையுடன் நாளை மோதுகிறது பெங்களூர்


எட்­டா­வது ஐ.பி.எல். வெளி­யேற்றப் பிரிவு போட்டி புனேவில் நேற்று நடந்­தது. இந்­தப்­போட்­டியில் ராஜஸ்தான் அணி 71 ஓட்­டங்­களால் பெங்­க­ளூ­ரிடம் வீழ்ந்து நடப்பு ஐ.பி.எல். இல் இருந்து வெளி­யே­றி­யது. வெற்­றி­பெற்ற கோலி தலை­மை­யி­லான பெங்­களூர் அணி இறு­திப்­போட்­டிக்கு நுழை­வ­தற்­கான போட்­டியில் நாளை சென்­னையை எதிர்­கொள்­கி­றது. நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்­ப­மான இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பெங்­களூர் அணித் தலைவர் கோலி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார். அதன்­படி அதி­ரடி ஆட்­டக்­காரர் கிரிஸ் கெய்ல், கோலி ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள். கெய்ல் அதி­ர­டி­யாக விளை­யா­டு­வ­தற்கு வச­தி­யாக கோஹ்லி சற்று நிதா­ன­மாக ஆடினார். ஆனால் கெய்லால் அதி­ர­டி­யாக விளை­யாட முடி­ய­வில்லை. இதனால் அவர் 26 பந்தில் 27 ஓட்­டங்கள் எடுத்து ஆட்­ட­மி­ழந்தார். அதில் 4 பவுண்­டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். மறு­மு­னையில் விளை­யா­டிய கோஹ்லி 18 பந்துகளில் 12 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். இந்த இரண்டு விக்­கெட்­டு­க­ளையும் குல்­கர்னி வீழ்த்­தினார். அப்­போது பெங்­களூர் அணி 7.3 ஓவரில் 46 ஓட்­டங்கள் எடுத்து தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்­தது. மூன்­றா­வது விக்­கெட்­டுக்கு டிவில்­லியர்ஸ்- மந்தீப் சிங் ஜோடி சேர்ந்­தனர். இந்த ஜோடி முதலில் நிதா­ன­மாக விளை­யா­டி­யது. பின்னர் அதி­ரடி காட்­டினர். 10-ஆவது ஓவரில் 13 ஓட்­டங்கள் எடுத்த இந்த ஜோடி 12ஆவது ஓவரில் 12 ஓட்­டங்­களை எடுத்­தது. 15ஆ-வது ஓவரில் டி வில்­லியர்ஸ் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்­டரி அடிக்க அந்த ஓவரில் பெங்­களூர் அணிக்கு 19 ஓட்­டங்கள் கிடைத்­தன. அதன்பின் ஒரு ஓவ­ருக்கு சரா­ச­ரி­யாக 10 ஓட்­டங்­க­ளுக்கு மேல் எடுத்­தனர். மோரிஸ் வீசிய 18ஆ-வது ஓவரில் டி வில்­லியர்ஸ் இரண்டு இமா­லய சிக்ஸர் விளா­சினார். 19-ஆவது ஓவரில் டி வில்­லியர்ஸ் ரன் அவுட் ஆனார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்­டரி, 4 சிக்ஸர் விலா­சினார். அந்த ஓவ­ரி­லேயே மந்தீப் சிங் ஒரு சிக்சர், ஒரு பவுண்­டரி அடித்து அரை சதத்தை கடந்தார். கடைசி ஓவரில் 11 ஓட்­டங்கள் எடுக்க பெங்­களூர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்­பிற்கு 180 ஓட்­டங்­களைக் குவித்­தது. மந்தீப் சர்மா 34 பந்தில் 7 பவுண்­டரிஇ இரண்டு சிக்­ஸ­ருடன் 54 ஓட்­டங்­களை எடுத்து கடைசி வரை ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். 181 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்­களில் 109 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்துஇ 71 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. ராஜஸ்தான் அணியின் ரஹானே 42 ஓட்­டங்­க­ளையும் வொட்சன் 10, ஸ்மித் 12, நாயர் 12, ஹுடா 11 ஓட்­டங்கள் வீதம் பெற்­றுக்­கொண்­டது. ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்­தனர். இரண்டு வீரர்கள் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர். இந்த தோல்வியோடு ராஜஸ்தான் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறுகிறது. ஏற்கனேவே மும்பை அணியிடம் தோல்வியுற்ற சென்னை அணியுடன் பெங்களூர் அணி மோதவுள்ளது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பையுடன் சம்பியன் பட்டத்திற்காக மோதும்.
வெளியேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ் : சென்னையுடன் நாளை மோதுகிறது பெங்களூர் Reviewed by Author on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.