அண்மைய செய்திகள்

recent
-

மகளிர் கிரிக்கெட்டில் பாலியல் இலஞ்சம்:அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு


இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பாலியல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை செய்­ய­வென அமைக்­கப்­பட்ட குழு அதன் விசா­ரணை அறிக்­கையை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­க­விடம் கையளித்­துள்­ளது. இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பணிப்பாளர் மற்றும் தேசிய தேர்­வா­ளர்கள் பாலியல் இலஞ்சம் பெறு­வ­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் நிமல் திஸா­நா­யக்க தலை­மை­யி­லான குழு நேற்று அமைச்­ச­ரிடம் அது தொடர்பாக அறிக்கை சமர்­ப்பித்­துள்­ளது. இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இடம்­பி­டிக்க வேண்­டு­மாயின் தேர்­வா­ளர்கள் சில­ருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்­டி­யுள்­ள­தென முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­ப­ட்­டன. இது தொடர்பில் ஆராய 2014ஆம் ஆண்டு அப்­போ­தைய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரணை குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட்டில் பாலியல் இலஞ்சம்:அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு Reviewed by Author on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.