அண்மைய செய்திகள்

recent
-

பிரதமரின் யோசனையால் யாழில் உறுப்பினர் தொகை குறையும்


அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்ற அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகையால் இது தொடர்பில் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்னர் திருத்­தங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.

இலங்­கையின் வர­லாற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களின் எண்­ணிக்கையை அதி­க­ரிப்­பது என்­பது பெரிய விட­ய­மல்ல. சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த யோச­னை­யினால் யாழ்ப்­பா­ணத்தின் உறுப்­பினர் தொகை குறை­வ­டையும் அபாயம் உள்­ளது. அத்­தோடு மாத்­த­றை­யிலும் அந்த நிலை­மையே காணப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தி­னூடாக தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்­பி­னையும் உள்­ள­டக்­கு­மாறே அர­சாங்­கத்­தி­டம கோரினோம். அதுவே மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட 100 நாள் வேலைத் திட்டத்­திலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ளது. எனினும் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.

எவ்­வா­றா­யினும் தேர்தல் மறு­சீ­ர­மைப்­பினை 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்தார். இதன்­படி தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டத்திற்கு தற்­போது அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட யோசனை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட திருத்­தமே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டுள்ளது. இதன்­ பி­ர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்­களின் எண்­ணிக்கை 225 ஆக திருத்­தப்­பட்­டுள்­ளது. இந்த திருத்­த­த்தினால் சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளுக்கும் சிறிய அர­சியல் கட்­சி­க­ளுக்கும் பெரு­ம­ளவில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் மறு­சீ­ர­மைப்புக் குழு என்ற வகையில் அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் சிவில் அமைப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னரே பாரா­ளு­மன்ற ஆச­னங்­களின் தொகையை 255 ஆக அதி­க­ரித்தோம்.

இருந்தபோதிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகை 255 ஆக மாற்றம் செய்­தமை நாட்­டுக்கு உகந்­த­தல்ல என ஐக்­கிய தேசியக் கட்சி வாதா­டு­கி­றது.அவ்­வா­றாயின் 1977 ஆம் ஆண்டு 170 ஆச­னங்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்களின் எண்­ணிக்­கையை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த்தன 225 ஆக அதி­க­ரித்தார். எனினும் அதன்போது எந்­த­வொரு எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் தற்­போது சனத்­தொ­கை­யா­னது இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. அவ்­வா­றாயின் அதற்­கேற்றால் போல் பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பினர் தொகையும் அதிக்­க­ரிக்­கப்பட வேண்டும்.

இதன்­ பி­ர­கா­ரமே அனைத்துக் கட்­சி­களின் ஆலோ­ச­னையை பெற்று 255 ஆக ஆச­னங்களின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்தோம். எனவே இன்று வெள்­ளிக்­கி­ழமை இது தொடர்பில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் விசேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். அதன் பின் இது குறித்­தான திருத்­தங்­களை முன்­வைப்போம்.

குறித்த திருத்­த­ச் சட்­டத்தை நிறை­வேற்­றுவோம். இந்­நி­லையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு நாம் அனு­மதி வழங்க தீர்மானித்துள்ளோம். இதன்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அதன் செயற்பாடுகள் தொடரும். இதன்போது ஊடகவியலாளரினால் கேள்வியெழுப்பப்பட்ட போது பதிலளித்த அநுர பிரியதர்ஷன யாப்பா,

கேள்வி – முன்னைய ஆட்சியின் போது ஏன் தேர்தல் முறைமை, ஜனாதிபதி முறைமையை மறுசீரமைக்கவில்லை?

பதில் – அந்த காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றோம். எவ்வாறாயினும் 20 ஆவது திருத்தத்தை நாமே நிறைவேற்றுவோம் என்றார்.


 
பிரதமரின் யோசனையால் யாழில் உறுப்பினர் தொகை குறையும் Reviewed by Author on June 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.