அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் புறக்கணிக்கப்படும் அகதி மாணவர்கள்: மத்திய அரசின் நிலைப்பாட்டை கோரும் நீதிமன்றம்


இந்தியாவில் உள்ள இலங்கை அகதி மாணவர்களின் மருத்துவ படிப்புக்காக ஒதுக்கியுள்ள இடங்கள் குறித்து மன்றுக்கு அறிவிக்கவேண்டும் என்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளான கிஷான் கௌல் மற்றும் டி.எஸ்.சிவநாயகம் ஆகியோரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதியன்று நடத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அகதி மாணவியான டி.நந்தினி என்பவர் உரிய புள்ளிகளை கொண்டிருந்த போதும் அவருக்கு மருத்துவ படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நட்பு நாட்டு மாணவர்களுக்கு சுயநிதி அடிப்படையிலேயே மருத்துவ கற்கையை மேற்கொள்ள முடியும் என்ற திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

எனினும் அகதி மாணவர்கள் அந்த திட்டத்துக்குள் வரமாட்டார்கள் என்று மனுதாரர் தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவிலேயே பிறந்தவர்களை மனதில் இருத்தி இந்த கற்கைக்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் புறக்கணிக்கப்படும் அகதி மாணவர்கள்: மத்திய அரசின் நிலைப்பாட்டை கோரும் நீதிமன்றம் Reviewed by Author on June 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.