அண்மைய செய்திகள்

recent
-

மற்றும் ஒரு தமிழ் இராணுவப் பிரிவு பயிற்சியை முடித்து வெளியேறியது!- இராணுவம்






இலங்கை இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட மற்றும் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த அணிவகுப்பில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 46பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நான்கரை மாத அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பயிற்சி பாடசாலையில் இலங்கையின் 15 எறிகணை பயிற்றுவிப்பாளர்களின் மேற்பார்வையில் மோட்டார் திருத்தல், மின்சார இணைப்பு உட்பட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பயிற்றப்பட்டனர்.

அணிவகுப்பின் போது முல்லைத்தீவின் பாதுகாப்பு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விதானகே, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றனர்.
மற்றும் ஒரு தமிழ் இராணுவப் பிரிவு பயிற்சியை முடித்து வெளியேறியது!- இராணுவம் Reviewed by Author on June 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.