சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு உரியவாறு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என வடமத்திய மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான பலருக்கு கொடுப்பனவு கிடைப்பதில்லை என வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் கே.எச்.நந்தசேன தெரிவித்தார்.
குறிப்பாக பிரதேச செயலாளர்கள் ஊடாகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அதற்கான மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை உட்பட ஏனைய நடைமுறைகளில் தாமதம் நிலவுகின்றமையும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிறுநீரக நோயாளர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் கூறினார்.
சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு உரியவாறு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment