தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-Photos
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை(12-06-2015) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று(2) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
நேற்று(1) திங்கட்கிழமை இரவு மூன்று படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அவர்களின் 3 படகுகளும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீனவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(2) மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தினூடாக கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த 14 மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-Photos
Reviewed by NEWMANNAR
on
June 02, 2015
Rating:
No comments:
Post a Comment