புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறலாம்: விஜயகலா மகேஸ்வரன்
புங்குடுதீவில் மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து பல குடும்பங்கள் வெளியேறி வருகின்றன.
இந்தத் தகவலை பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக் கொண்ட நான்கு குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி ஏற்கனவே புங்குடுதீவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நான்கு மாணவிகளும் வித்தியாவுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களாவர்.
தற்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர்.
இந்த குடும்பத்தினர் வித்தியாவுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், மன அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதங்களது பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்க்கவும், வேறு இடத்தில் குடியேறவும் அவர்களின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, இவர்களின் உறவினர்களின் குடும்பங்களும் புங்குடுதீவை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியா கொலை செய்யப்பட்டதன் பின்னரும் அப்பிரதேசத்திற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையே இந்தக் குடும்பங்கள் வெளியேறுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறலாம்: விஜயகலா மகேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
June 02, 2015
Rating:

No comments:
Post a Comment