அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பிரதமர் சாராம்சம் வெளியிடவுள்ளார்


புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பான சாராம்சத்தை பிரதமர் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் மாலை 20வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்ட விவாதம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

குறித்த விவாதத்தில் ஆளும், மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள்.

இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் நாளை கட்சித் தலைவர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பிரதமர் சாராம்சம் வெளியிடவுள்ளார் Reviewed by NEWMANNAR on June 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.