திருகோணமலை பொதுச்சந்தைக்கு சென்ற ஜனாதிபதி
திருகோணமலை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக்கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலைக்குச் சென்றிருந்தார். இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை பொதுச்சந்தையினைப் பார்வையிட்டுள்ளார். அங்கு விலைவிபரங்களை விசாரித்து வர்த்தகர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார் இதேவேளை, ஜனாதிபதி சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தகவல்களைக் கேட்டறிந்துள்ளார். இதன் போது மக்கள் தமது பிரதேசத்தில் இருக்கும் குறை நிறைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொதுச்சந்தைக்கு சென்ற ஜனாதிபதி
Reviewed by Author
on
June 29, 2015
Rating:

No comments:
Post a Comment