அண்மைய செய்திகள்

recent
-

இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு சஞ்சா கடத்திய 4 இந்திய மீனவர்கள் கைது-29 கிலோ கஞ்சா பொதிகளும் மீட்பு.-Photos



இந்தியாவில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு கடத்திவரப்பட்ட ஒரு தொகுதி கஞ்சாப்பொதியினை கடற்படையினரும்,தலைமன்னார் பொலிஸாரும் இன்று(6) திங்கட்கிழமை காலை மீட்டுள்ளதோடு குறித்த கஞ்சா பொதியை கொண்டு வந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(6) திங்கட்கிழமை காலை 3.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரைப்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனை இட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த கஞ்சா மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சப்பொதி இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது .

இந்த நிலையில் கடலில் வீசிய கஞ்சா மூடைகளை கைப்பற்றி கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு கைது செய்த 4 இந்திய மீனவர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது கடலில் வீசப்பட்ட நிலையில் 29 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு குறித்த நான்கு இந்திய மீனவர்களையும்,மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு சஞ்சா கடத்திய 4 இந்திய மீனவர்கள் கைது-29 கிலோ கஞ்சா பொதிகளும் மீட்பு.-Photos Reviewed by NEWMANNAR on July 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.