தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக அனைவரும் பாடுபடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதியை உள்ளடங்கிய ரீதியில் பிரதேசசபை, மாநகர சபை, மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
11 பேர் கொண்ட குழுவினை அமைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆசன பங்கீடு தொடர்பான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக அனைவரும் பாடுபடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by NEWMANNAR
on
July 07, 2015
Rating:

No comments:
Post a Comment