பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்
உயர் தர பரீட்சைக்குகளுக்கு தடை ஏற்படாத வகையில் உடனடியாக தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசியரியர் சங்கத்தினால் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு பின்னர் தேர்தலை நடத்துமாறு அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இடையில் பரீட்சையை நடத்த வேண்டாம் என மாணவர்களின் பெற்றோர் தம்மை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தலை பிற்போட்டு பரீட்சைக்கு தேறியுள்ள மாணவர்களை சுதந்திரமாக தேர்தலுக்கு முகம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் இலங்கை ஆசிரியர் நடவடிக்கை மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment