அண்மைய செய்திகள்

recent
-

எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு சரக்குக் கப்பலுடன் மோதி விபத்து 21 பேர் பலி...


எகிப்­திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் பட­கொன்றில் புதன்­கி­ழமை இரவு இடம்­பெற்ற திரு­மண நிச்­ச­ய­தார்த்த வைப­வத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்­ப­லொன்­றுடன் மோதி­யதில் அதில் பயணம் செய்த குறைந்­தது 21 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. மேற்­படி படகில் பய­ணித்த 5 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம் குறைந்­தது 6 பேர் காணாமல் போயுள்­ளனர். இந்­நி­லையில் காணா­மல் ­போ­ன­வர்­களை மீட்கும் பணி இருள் கார­ண­மாக தாம­த­ம­டைந்­த­தாக பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

பலி­யா­ன­வர்­களில் குறைந்­தது இரு சிறு­வர்கள் உள்­ள­டங்­கு­கின்றனர். இளம் ஜோடி­யொன்றின் திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்தைக் கொண்­டாட அந்த ஜோடியின் குடும்­பத்­தி­னரும் நண்­பர்­களும் குறிப்­பிட்ட படகை வாட­கைக்கு அமர்த்­தி­யுள்­ளனர். இந்த சம்­ப­வத்தில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்து கொண்ட ஜோடிக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

 இந்நிலையில் சரக்குக் கப்பலின் கப்டனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு சரக்குக் கப்பலுடன் மோதி விபத்து 21 பேர் பலி... Reviewed by Author on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.