12 வருட காலமாக எயிட்ஸ் நோய்க்கான மருந்து எடுக்காத நிலையில் நோய் தணிவடைந்த அதிசயம்...
பிரான்ஸைச் சேர்ந்த 18 வயது யுவதியொருவருக்கு ஏற்பட்ட எயிட்ஸ் நோய் 12 வருட காலத்திற்கு மேலாக சிகிச்சை பெறாத நிலையில் அதிசயிக்கத்தக்க வகையில் தணிவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் இடம்பெற்ற சர்வதேச எயிட்ஸ் சபையின் கூட்டத்தின் போது மருத்துவர்களால் இது தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி கூட்டமானது கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இன்று புதன்கிழமை வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி அறிக்கையின் பிரகாரம் இது குழந்தையொன்றுக்கு எச்.ஐ.வி. வைரஸ் தொற்று நீண்ட காலப் பகுதியில் தணிவடைந்த உலகின் முதலாவது சம்பவமாக கருதப்படுகிறது.
எயிட்ஸ் தொற்றுக்குள்ளான சிலருக்கு சிகிச்சை நிறுத்தப்பட்ட பின்னர் எவ்வாறு இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது சாத்தியமானது என்பது தொடர்பில் மேலதிக ஆய்வு அவசியமாகவுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1996 ஆம் ஆண்டு பிறந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு, எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று அவரது தாயிடமிருந்து பிறக்கும் போது ஏற்பட்டது.
அவருக்கு பிறந்து 3 மாதம் முதல் எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் அவர் 6 வயதுக் குழந்தையாக வளர்ச்சியடைந்த போது அவரது குடும்பத்தினர் அவருக்கான சிகிச்சையை நிறுத்த தீர்மானித்தனர்.இதனையடுத்து 12 வருடங்கள் கழித்து தற்போது 18 வயது யுவதியாக மாறியுள்ள அவருக்கு குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரது குருதியில் எச்.ஐ.வி. வைரஸுகளின் அளவு மிகவும் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.
அந்த யுவதி எதுவித நோய் பாதிப்பு அறிகுறிகளுமின்றி இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
12 வருட காலமாக எயிட்ஸ் நோய்க்கான மருந்து எடுக்காத நிலையில் நோய் தணிவடைந்த அதிசயம்...
Reviewed by Author
on
July 24, 2015
Rating:

No comments:
Post a Comment