மன்னார் மாணவன் தென்கொரியா பயணம்.
மன்னார்-உயிலங்குளம் சிறுநீலாசேனையைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் கின்சிலி சாள்ஸ் வியோ என்பவர் அகில இலங்கை ரீதியாக பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற படகு ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று சர்வதேச மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதினை பெற்றுள்ளார்.
இவர் கடந்த 3 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தென்கொரியாவின் Gwanju எனும் இடத்தில் இடம் பெற்று வரும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கிடையிலான படகோட்டப்போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக தென்கொரிய பயணமாகியுள்ளார்.
இவர் மன்/யிலங்குளம் றோ.க.த.க. பாடசாலை மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவன் ஆவர்.
மன்னார் மாணவன் தென்கொரியா பயணம்.
Reviewed by NEWMANNAR
on
July 09, 2015
Rating:

No comments:
Post a Comment