தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் 110 அதிபர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்க கூறியுள்ளார்.
அரச சேவைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய போட்டிப் பரீட்சையொன்றை நடத்தி புள்ளிகள் அடிப்படையில் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment