அண்மைய செய்திகள்

recent
-

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்


வங்­கி­களில் பணத்தை பதுக்கி வைத்­தி­ருப்போர் தொடர்பில் விசேட நிதிக்­குற்­றப்­பி­ரி­வுக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தோடு அது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் விரைவில் பலர் கைதா­கலாம் என்றும் எச்­ச­ரிக்­கை­வி­டுத்த அமைச்­சரும் கண்டி மாவட்ட ஐ.தே.க.வேட்­பா­ள­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல, புலம்­பெயர் தமி­ழர்­களின் முத­லீ­டு­களை பெற்று அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் இனங்­க­ளி­டையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தவும் எதிர்­கால எமது ஆட்­சியில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென்றும் தெரி­வித்தார்.

பிட்ட கோட்­டே­யி­லுள்ள சிறி­கொத்­தாவில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் லக்ஷமன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த ஆட்­சியின் போது மோச­டி­யாக வங்­கி­களில் பணத்தை வைத்­தி­ருப்போர் தொடர்­பாக விசேட நிதிக்­குற்றப் பிரி­வுக்கு தக­வல்கள் கிடைக்­கப்­பெற்று அவை விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு மோச­டி­யாக வங்­கி­களில் பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள பணம் தொடர்­பாக வங்­கி­களில் தக­வல்­களை பெற முடி­யா­துள்­ளது. எதிர்­கா­லத்தில் இது தொடர்­பான சட்ட ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு தக­வல்கள் பெற்றுக் கொள்­ளப்­படும்.அதன் போது பலர் கைதா­கலாம்.

கடந்த காலங்­களில் புலம்­பெயர் தமி­ழர்கள் இலங்­கையில் முத­லீடு செய்ய ஆர்வம் காட்­டினர் ஆனால் அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் அனு­மதி வழங்­க­வில்லை.

ஆனால் இன்று நாம் புலம்­பெயர் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம். இங்கு வந்து முத­லீடு செய்­யு­மாறு இதன் மூலம் அவர்­களின் பங்­க­ளிப்பை நாட்டின் அபி­வி­ருத்­திக்கு பெற்றுக் கொள்ள முடி­வ­தோடு தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு ஏற்­ப­டு­வ­தோடு இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­படும்.
இனங்­களை ஐக்­கி­யப்­ப­டுத்தி நாட்டை சுபிட்சம் பாதையில் முன்­னெ­டுப்­பதே ஐ.தே.கட்­சியின் இலக்­காகும். சிங்­கள பெளத்த மக்­களின் பாது­காப்பில் கவனம் செலுத்­து­வது போன்று தமிழ் முஸ்லிம் கிறிஸ்­தவ மக்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுக்கு வாழும் உரிமை உறுதி செய்­யப்­படும்.

இன்று வடக்கு, கிழக்கில் மக்கள் தமது சொந்த வியா­பா­ரங்­களை செய்ய முடி­யாது நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளனர். எமது ஆட்­சியில் அப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும்.

அடுத்த தேர்­த­லுக்கு பின்னர் ஐ.தே.முன்­ன­ணியின் ஸ்திர­மான ஆட்சி உரு­வாகும். இதன்­போது 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவோம் அதற்­கான திட்­டத்தை எமது தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரு­வாக்­கி­யுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் ஐ.ம.சு. முன்­ன­ணிக்கும் வெற்றி பெற முடி­யாது என அதன் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே தெரி­வித்­துள்ளார்.
அத்­தோடு கட்­சிக்­குள்­ளேயே ஒற்­று­மை­யில்­லாத போது இவர்­களின் ஆட்சி நடத்­து­வது மட்­டு­மல்ல எதிர்க்கட்சியிலும் இருப்பதற்கு தகுதியில்லை. அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்தினார். இன்று அந்தப் பாவம் அக்கட்சியையே பிளவுப்படுத்தி சின்னாப்பின்னமாக்கியுள்ளது.இதுதான் விதியாகும். பாவத்தின் பிரதிபலனாகும் என்றும் அமைச்சர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் Reviewed by Author on July 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.