அண்மைய செய்திகள்

recent
-

எமது ஒரே நோக்கம் ஒரு நாடு இரு தேசம் என்பதே.-தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட இளம் வேட்பாளரான பற்றிக்ஸ் ஜனன்

24.07.2015 அன்று வவுனியாவில் நடந்த ஊடகவியளாளர் சந்திப்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  மன்னார் மாவட்ட இளம்  வேட்பாளரான பற்றிக்ஸ் ஜனன் அவர்கள்  பேசுகையில்
எமது ஒரே நோக்கம்  ஒரு நாடு இரு இரு தேசம் என்பதே..
இதற்கமைய எனது பணியை முன்னெடுப்பேன் என்றும்.
யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகளாகிய நிலையில்,  யுத்தத்தினாள் பாதிக்கப் பட்ட இளைஞர்கள் இன்னும் தமது அன்றாட வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில், வறுமை கோட்டின் கீழேதான்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இந்த நிலையை மாற்ற பாடுபடுவேன், அதுமட்டுமன்றி யுத்தத்தினாலும் இன்னும் பல வழிகளிலும்  பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதோடு, அனைத்து சிறுவர்களுக்கும் தரமான கல்வியை வழங்க முழு மூச்சாக உழைப்பேன் எனவும்.
இந்த உலகிலே மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் பெண்கள். ஆனால் இந்த சமுதாயத்தில் இளம் வயதிலேயே கணவனை இழந்து எத்தனையோ பெண்கள்   இருளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அவல  நிலையை மாற்றி பெண்களின் வாழ்வை ஒளிமயமாக்கி அவர்களை இந்த சமுதாயத்தில் உயர்த்திடுவேன் என்ற தனது உருக்கமான  கருத்தையும்  உறுதியுடன் முன்வைத்தார்.. மற்றும்
தமிழர்களான நமது வாழ்க்கை தரத்தை உயர்த்த  முயற்ச்சிப்பதோடு, இந்த சமுதாயத்தில் பல மாற்றங்களை கொண்டு வருவேன் என்பதையும் உரத்த குரலில் உறுதியாக கூறியுள்ளார்..


எமது ஒரே நோக்கம் ஒரு நாடு இரு தேசம் என்பதே.-தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட இளம் வேட்பாளரான பற்றிக்ஸ் ஜனன் Reviewed by NEWMANNAR on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.