புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்..

புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி மாவட்டத்தில் வெற்றியீட்டிய முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மறைந்த காமினி திஸாநாயக்கவுக்கு பின்னர் அதிகப்படியான விருப்பு வாக்குகளை தனக்கு பெற்றுக் கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐ.தே.கட்சியின் வெற்றி தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முப்பது வருடங்களாக தேர்தல் சட்டங்கள் வெறுமனே புத்தகங்களுக்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தன. எந்தவொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புத்தகங்களுக்குள் வரையறுக்கப்பட்டிருந்த தேர்தல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சுவரொட்டிகள், கட்அவுட்கள் அகற்றப்பட்டு பொலிஸாரும் தமது கடமைகளை சரிவரச் செய்தனர்.
இவ்வாறானதோர் நல்லாட்சி சூழ்நிலையில் நீதியும் நியாயமுமான தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் மக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.
எனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான நல்லாட்சி நாட்டில் அமைவது உறுதியாகும். இதனால் புதிய நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.
அதனை விடுத்து தொடர்ந்தும் அரசியலில் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்காது அரசுடன் இணைய வேண்டும். ஐ.தே.கட்சியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு மறைந்த காமினி திஸாநாயக்க அதிக விருப்புவாக்குகளை பெற்றார்.
அதன் பிறகு அதிகப்படியான விருப்பு வாக்குகள் இத் தேர்தலில் எனக்கு கிடைத் துள்ளது. இதற்காக எனக்கு வாக்களித்த ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறேன்.எதிர்கால நல்லாட்சியில் எனது சேவைகள் தொடரும் என்றார்.
புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்..
Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment