அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு...


பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

குறித்த கொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு... Reviewed by Author on August 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.