அண்மைய செய்திகள்

recent
-

உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கமுடியாது...


இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை, மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக உள்­ளக விசா­ர­ணையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென தெரி­வித்­துள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சர்­வ­தேச விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கையை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு எடுக்க­ வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் கோப்பாய் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரி­மைகள், மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக உள்­ளக விசா­ர­ணையை ஒரு­போதும் ஏற்­க­மு­டி­யாது. பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் நான் உட்­பட ஏனைய கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் சர்­வ­தேச விசா­ர­ணை­யையே வலி­யு­றுத்தி வந்­துள்ளோம். அத்­துடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அவ்­வி­ட­யமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு இருக்­கையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாது என தெரி­விக்­கின்றார். அதே­நேரம் சர்­வ­தேச நிய­ம­னங்­களின் கீழ் உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது தொடர்­பிலும் பே­சப்­ப­டு­கின்­றது.

இலங்கை அர­சாங்கம் உள்ளக விசா­ர­ணைக்­கான பொறி­மு­றை­யினை உரு­வாக்கி கீழ் மட்­டத்தில் இருக்க கூடி­ய­வர்­க­ளுக்கு தண்­ட­னை­யினை கொடுக்க முடியும். முக்­கி­ய­மாக குற்றம் புரிந்­த­வர்­க­ளுக்கு தண்­டனை கிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யான விடயம். இதே­வேளை, உள்­ளக விசா­ரணை ஒரு­வ­ருக்கு தண்­டனை கொடுப்­ப­துடன் முடிந்­து­விடும்.

குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை கொடுப்­பதை விட, தமிழ் மக்­களின் பிரச்­சினை என்ன, குற்­றங்கள் ஏற்­ப­டாது எவ்­வாறு தடை செய்­வது, அதற்கு ஏற்­ற­வாறு, இலங்­கையில் பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்ப்­பது போன்ற விட­யங்­களை சர்­வ­தேச விசா­ர­ணையின் ஊடாக மாத்­தி­ரமே செய்ய முடியும். சர்­வ­தேச நாடுகள் பலதில் விசா­ரணை ஆணைக் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, சர்­வ­தேச புலம்­பெயர் மக்கள், சர்­வ­தேச நாடு­களின் அனு­ச­ர­ணை­யுடன், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு உந்து சக்­தி­யாக இருக்கும்.

தற்­போது இருக்­கின்ற நிலைமை மாற்­றப்­பட வேண்டும். புதி­தாக வந்­துள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு­வினர் காத்­தி­ர­மான முடி­வு­களை எடுக்க வேண்டும். மீள்குடியேற்றம் மற்றும் வலி. வடக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது போன்ற விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் விரைவாகச் செயற்படுத்தவேண்டியிருக்கின்றமையால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் அதீத கவனம்செலுத்தவேண்டும் என்றார்.

உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கமுடியாது... Reviewed by Author on August 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.