அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தவே தேசிய அரசுக்கான ஒப்பந்தம்...


தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியில் அமரச் செய்வதற்கு ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யினால் தேசிய அர­சாங்­கத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ­கை­ச்சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல்­ வீர­வன்ச குற்றம் சுமத்­தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் எமது செயற்­பா­டுகள் மீது நம்­பிக்கை வைத்து எமக்கு வாக்­க­ளித்த 47 இலட்சம் மக்­களின் நம்­பிக்­கையை தகர்க்­கும் ­வ­கையில் நாம்­ ஒரு போதும் செயற்­படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

சொத்து விபரம் தொடர்பில் வாக்­கு­மூலம் ஒன்றை பதி­வு­செய்­வ­தற்­காக முன்­னாள் அ­­மைச்சர் விமல் வீர­வன்ச நேற்று பொலிஸ் நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரி­விற்கு வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தார்­.

இதன்போது தனது வாக்கு மூலத்­தினை பதிவு செய்த பின்னர் அங்கு கூடி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­லளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்­ மே­லும் ­க­ருத்து தெரிவிக்­கையில், கடந்த பொதுத் தேர்தலில் எம்­மீது நம்­பிக்கை வைத்து எமக்கு வாக்­க­ளித்த 47 இலட்சம் மக்­களின் நம்­பிக்­கையை வீண­டிக்கும் வகையில் நாம் ஒரு போதும்­ செ­யற்­பட போவது இல்லை. அந்­த­ வ­கையில் ஐக்­கிய தேசிய கட்சி யா னது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­டன் ­தே­சிய அர­சாங்கம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட்­ட­மைக்­கான முக்­கிய காரணம் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியில் அம­ர­வைப்­ப­தற்கே ஆகும்.

இவ்­வா­றான நிலையில் சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் செயற்படுவாராயின் எதிர்­வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மாநாட்டில் இலங்­கையின் யுத்­த ­கா­லப்­ப­கு­தியில் இடம்பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்று வெளியி­டப்­ப­ட­வுள்ள நிலையில் இது குறித்து சம்­பந்­த­னினால் கூறப்­படும் கருத்­தா­னது அனை­வ­ரி­னாலும் நம்­பப்­ப­டு­வதற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.

இதற்­கான சந்­தர்ப்­பத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சி சம்­பந்­த­னுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே தேசிய அரசாங்கம் ஒன் றுக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானது மிகவும் பாரதூரமானது. அந்த வகையில் நாம் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் தேசிய அரசுடன் இணையப்போவது இல்லை என்றார்.


 
சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தவே தேசிய அரசுக்கான ஒப்பந்தம்... Reviewed by Author on August 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.