கூட்டமைப்பே உலக நாடுகளின் ஆலோசனைகளோடு ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்: உ.த.ப.இயக்கம்
உலக நாடுகளின் ஆலோசனைகளோடு, அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத் தரவல்ல வல்லமையும் அங்கீகாரமும் கொண்டது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும் என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களின் முடிவை உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
அதிலும் முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் மேற்படி நாடுகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக கணிக்கப்படவுள்ளன.
இந்த வகையில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான எதிர்பார்ப்போடு உள்ளன.
முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ள எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் படி அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற உலக நாடுகளின் பரிந்துரைகளின்படி, ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத் தரவல்ல வல்லமையும் அங்கீகாரமும் கொண்டது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும்.
இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள இலங்கைத் பொதுத் தேர்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னர் எப்போதும் இல்லாத அளவில் எதிர்வரும் பொதுத் தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்குமே பெரும் சவால்கள் நிறைந்தவையாகவே காண்பபடுகின்றன.
குறி;ப்பாக நமது ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் நலன்களைப் பேணுவதற்காகவும் தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டிகள் என்ற பெயருக்கு ஏற்றதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றதொரு பங்கு வகிக்கின்றது.
இது இ;வவாறிருக்க, தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நாலா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த தவறான விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் சில சக்திகளால் வேண்டுமென்றே பரப்பப்படுவதற்கு காரணம் சக தமிழ்க் கட்சிகளே. ஆனாலும் அவற்றையெல்லாம் முறியடித்து மக்கள் மனங்களில் வெற்றியாளர்களாக நிற்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களே.
இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, ஈழத்தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்குரிய தலைமைத்தவப் பண்பு கொண்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கூட, ஈழத் தமிழர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்திற்கு இணையாக கருத்துச் செறிவுகள் கொண்ட ஒரு அறிவியல் போராட்டம் எமக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் எமது மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகின்றது. அத்துடன் எமது புலம்பெயர் மக்களின் அமைப்புக்களில் பல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் மனங்களில் நிறைந்தும் காணப்படுகின்றன.
இந்தவகையில் விடுதலைப் புலிகளின் வாழ்த்துக்களோடு இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் அமோக வெற்றிகளை ஈட்ட வேண்டும். அவர்களுக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைத் தன்மை கொண்டவை அல்ல என்பதை நிருபிக்க நாம் முயல வேண்டும்.
உதிரிக்கட்சிகளின் வேட்பாளர்கள்கள் பரப்புகின்ற கருத்துக்களில் பொய்மையே புரையோடிக் கிடக்கின்றது என்பதை நாம் எமது தாயக தமிழ்ப் பேசும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு நாம் செயற்பட்டால் தேர்தலில் வெற்றிகளை குவிக்கப்போவதும், உலக நாடுகளின் ஏற்பாட்டின்படி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தரவல்ல வல்லமை கொண்டதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மைப் பலத்தோடு பாராளுமன்றத்தில் அமரும் நாளிற்காக காத்திருப்போம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில சிறப்புத் தலைவர், கனடா வாழ் திரு வி. எஸ். துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் ஆகியோரால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பே உலக நாடுகளின் ஆலோசனைகளோடு ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்: உ.த.ப.இயக்கம்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2015
Rating:

No comments:
Post a Comment