போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான நபர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:


No comments:
Post a Comment