அண்மைய செய்திகள்

recent
-

சேயா, வித்தியா படுகொலைக்கு நீதி கோரி விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டப் பேரணி...


பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி வேண்டுமெனக் கோரி விசேட தேவையுடையோர் நடாத்திய ஆர்ப்பாட்டப் பேரணி வவுணதீவில் இடம்பெற்றது.

அண்மையில் பாலியல் துஷ்;பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா மற்றும் வித்தியாவின் சூத்திரதாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

'சட்டத்தரணிகளே மனிதம்; மௌனித்து விட்டதா" 'நேற்று வித்தியா இன்று சேயா நாளை யார்.?" 'அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கின்றோம்" 'வித்தியா, சேயாவுக்கு நீதி வேண்டும்" என எழுதப்பட்ட வாசக அட்டைகளையும் ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

வாழ்வகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம் வரை சென்றதுடன் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

சேயா, வித்தியா படுகொலைக்கு நீதி கோரி விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டப் பேரணி... Reviewed by Author on September 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.