அண்மைய செய்திகள்

recent
-

நேபா­ளத்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் உரி­மைகள் செயற்­பாட்­டாளர் நிய­மனம்...


நேபா­ளத்தின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் உரி­மைகள் பிர­சா­ர­க­ரான பித்யா தேவி பந்­தாரி அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்­தால் ­தெ­ரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இது அந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் மிக்க நிகழ்­வாக கரு­தப்­ப­டு­கி­றது.நேபா­ளத்தின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட இரண்­டா­ம­வ­ராக பித்யா தேவி பந்­தாரி (54 வயது) விளங்­கு­கிறார்.

தற்­போது அவர் நேபாள ஆளும் பொது­வு­டைமை கட்­சியின் உப தலை­வ­ராக உள்ளார்.அவர் 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் நேபா­ளத்தின் பாது­காப்பு அமைச்­ச­ராக சேவை­யாற்­றி­யுள்ளார்.

இந்த மாத ஆரம்­பத்தில் நேபா­ளத்தின் புதிய பிர­த­ம­ராக கே.பி. ஷர்மா அலி தெரிவு செய்­யப்­பட்டார்.இந்­நி­லையில் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பித்யா தேவி பந்­தாரி பிர­த­மரின் நெருங்­கிய நண்­பர்கள் வட்­டா­ரத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.

ஆண்கள் செல்­வாக்குப் பெற்று விளங்கும் நேபாள அர­சி­யலில் நீண்ட கால­மாக ஈடு­பட்டு வரும் பெண்­ணொ­ரு­வ­ராக பித்யா தேவி பந்­தாரி விளங்­கு­கிறார்.அவர் நேபா­ளத்தில் முடி­யாட்சி கலைக்­கப்­பட்ட பின்னர் 2008 ஆம் ஆண்டில் அந்­நாட்டின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட ராம் பரன் யாதவின் இடத்­திற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.


 
நேபா­ளத்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் உரி­மைகள் செயற்­பாட்­டாளர் நிய­மனம்... Reviewed by Author on October 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.