அண்மைய செய்திகள்

recent
-

கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் பாதுகாக்கப்படும் : அகிலவிராஜ் காரியவசம்


கடந்த காலங்­களில் போன்று நாட்டின் கல்­வித்­து­றையில் அர­சியல் தலை­யீ­டுகள் இல்­லா­வண்ணம் தாம் பாது­காப்­பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.


கடந்த 28 ஆம் திகதி கொழும்பு நாலந்தா கல்­லூ­ரியில் இடம்­பெற்ற பரிசு வழங்கள் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

கடந்த காலங்­களில் கல்­வியியல் முறை­களில் அர­சியல் தலை­யீ­டுகள் இருந்­த­மையே தற்­போது கல்­வித்­து­றை­யிலும் ஏற்­படும் பெரும் முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மா­கி­யுள்­ள­து­ எ­திர்­கா­லத்தில் இவ்­வா­றான அர­சியல் தலை­யீ­டுகள் இல்­லாத கல்­விச்­சூ­ழலை ஏற்­ப­டுத்தி அதன் பிரதி பலனை மா­ணவர் சமு­தாயம் 30 வருடங்கள் அல்­லது ஐம்­பது வரு­டங்கள் வரையில் அனு­ப­விக்கும் வகை­யி­லான சிறந்த திட்­டங்­களை வகுப்­பதே எமது நோக்­க­மா­கவும் உள்­ளது.

நாட்டில் கல்­வித்­துறை புதுப்­பிக்­கப்­ப­டா­ததால் கல்வி, தொழில்­துறை, பொரு­ளாதார துறை ஆகி­யன வெவ்­வேறு பிரி­வு­க­ளாக உள்­ளன. உலகின் அபி­வி­ருத்தி அடைந்த நாடுகள் கல்­வித்­து­றையை புதுப்­பித்­துள்­ளது போன்று எமது நாட்டில் கல்­வியில் புதிய பரி­மா­ணங்­களை ஏற்­ப­டுத்த தேவை­யான அதி­கா­ரங்­களை தற்­போதும் அர­சாங்கம் தேசிய கல்வி நிறு­வ­கத்­திற்கு வழங்­கி­யுள்­ளது. அதன் பிர­காரம் கல்­வித்­து­றையில் மேற்­கொள்­ளப்­பட்ட அத்­தி­யா­வ­சிய மாற்­றங்­கள் தொடர்ந்தும் பாது­காக்­கப்­படும்.

கடந்த காலங்­களில் இடம் பெற்­றது போன்று கல்­வித்­து­றையில் எனது சுய சிந்­த­னையை மாத்­திரம் உள்­நு­ளைத்து புதிய திட்­டங்­களை வகுக்க எதிர்­பார்­க்க­வில்லை மாறாக கல்வி தொடர்பில் ஆழ­மாக அறி­வு­டைய புத்­தி­மான்­களை கொண்டு திட்­டங்கள் வகுப்­ப­தற்கே எதிர்­பார்த்­துள்ளோம் என தெரி­வித்­துள்ளார்.

இதன் போது நாலந்தா கல்­லு­ரியின் நாலந்த புத்­திர விருது பத்­தகே ரபித டில்சான் என்ற மாண­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­துடன் நாலந்தா கல்­லூ­ரியால் வரு­டாந்தம் வழங்கி வைக்­கப்­படும் கீர்த்தி ஸ்ரீ விருது தற்­போ­தைய விமா­னப்­படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்களவிற்கு கல்வி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் பாதுகாக்கப்படும் : அகிலவிராஜ் காரியவசம் Reviewed by Author on October 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.