அண்மைய செய்திகள்

recent
-

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் கூடிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!- ஜனாதிபதி


நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவையையும் கல்விச் சேவையை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் புதிய மூன்று மற்றும் இரண்டு மாடி கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சுகாதாரம் மற்றும் கல்விக்காக போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இவ்விரண்டு துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்விக்கும் சுகாதாரத்திற்கும் கூடிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!- ஜனாதிபதி Reviewed by NEWMANNAR on October 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.