தகவல் அறியும் உரிமை-மக்கள் கலந்துரையாடலுக்கான அழைப்பு.
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் சங்கம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழில் சங்க சம்மேலனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள மக்கள் கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
ஊடக ஊழியர்களின் தொழில் சங்க சம்மேலனத்தின் பிரதான செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் குறித்த மக்கள் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் பிரமுகர்கள்,கிராம மட்டத்தலைவர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக மன்னார்,வவுனியா முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை-மக்கள் கலந்துரையாடலுக்கான அழைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 09, 2015
Rating:

No comments:
Post a Comment