வடமாகாண சபையினால் மன்னார் மாவட்ட விவசாய நடவடிக்கைகளுக்காக 16 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு-ஐங்கரநேசன்
வடமாகாண சபையினால் 2015 ஆம் ஆண்டிற்கு விவசாய திணைக்களம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபாய் வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உள்ளீடுகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (9) காலை மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,,,
வடமாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 73 மில்லியன் ரூபாய் வடமாகணத்தில் உள்ள 5 மாவட்ட விவசாய திணைக்களங்களுக்கும் பகிரப்பட்டுள்ளது.
-இதற்கமைவாக யாழ் மாவட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாவும்,முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13.25 மில்லியன் ரூபாவும்,வவுனியா மாவட்டத்திற்கு 11.81 மில்லியன் ரூபாவும்,கிளிநொச்சி மாவட்டத்திற்கு 18.22 மில்லியன் ரூபாவும்,மன்னார் மாவட்டத்திற்கு 16.72 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 16.72 மில்லியன் நிதி 23 திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 திட்டங்களில் 17 திட்டங்கள் விவசாயிகளுக்கு உறியது.ஏனையவை திணைக்களங்களை வழப்படுத்துவதற்கும்,திணைக்களங்களின் தேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக 1062 விவசாயிகள் குறித்த 17 திட்டங்களின் மூலம் பயணடைகின்றனர்.
இதற்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.குறித்த 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட விவசாய உள்ளீடுகள் 3.3 மில்லியன் ரூபாய்(33 இலட்சம்) நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில் எமது பிரதான உணவான நெற்செய்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு உற்பத்தியை,விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் நெல் இனம்,உவர் நீரை தாங்கி வளரக்கூடிய நெல் இனம் பாராம்பரிய நெல் இனங்களை செயற்கை இரசாயனங்களை பயன்படுத்தாது இயற்கை உரங்களை பயன்படுத்தும் பாரம்பறிய நெல் இனம் மற்றும் புரதச்சத்தினையும் ஏனைய சத்தான உணவை ஊட்டக்கூடிய காலன் செய்கை போன்ற உற்பத்திகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளது.மக்களின் பணத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதனை பயன்படுத்தி உறிய பலனை பெற்றுக்கொள்ள வேண்டும்.என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாண சபையினால் மன்னார் மாவட்ட விவசாய நடவடிக்கைகளுக்காக 16 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு-ஐங்கரநேசன்
Reviewed by NEWMANNAR
on
October 09, 2015
Rating:
No comments:
Post a Comment