மன்னார் ஆயர் திடீர் சுகவீனம் அடைந்தமை அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலது கைது உடைந்தது போல் உள்ளது-அனுராதபுர சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கவலை-Photos
அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்றாவது நாளாக இன்று(14) அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினர் இன்று(14) புதன் கிழமை மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சார்பாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் பொறியியலாளர் ஏ.தேவானந் ஆகியோரே அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 30 அரசியல் கைதிகளை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன் போது சுமார் 20 முதல் 30 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறித்த அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்த அரசியல் கைதிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனமடைந்து உள்ளமை தமது விடுதலைக்கு வலது கரம் உடைந்தது போன்று உள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் ஆயர் திடீர் சுகவீனம் அடைந்தமை அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலது கைது உடைந்தது போல் உள்ளது-அனுராதபுர சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கவலை-Photos
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:
No comments:
Post a Comment