அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட தொழில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் வைபவ ரீதியாக இன்று(30) புதன் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம்,நிதி மற்றும் கணக்காய்வுக்கான தலைமை அதிகாரி டி.வில்லியம்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

-மன்னார் மாவட்டத்தில் தகைமை இருந்தும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்கள் தமது தகமைக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில்   குறித்த மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் திறந்த வைக்கப்பட்டது.

-குறித்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் திணைக்கள தலைவர்கள்,ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மாவட்ட தொழில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு. Reviewed by NEWMANNAR on October 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.