அண்மைய செய்திகள்

recent
-

மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு...


2015-ஆம் ஆண்டு மருத்­து­வத்­துக்­கான நோபல் பரிசை வில்­லியம் சி.கேம்பல், சதோஷி ஒமுரா மற்றும் யூயூ டு ஆகியோர் வென்­றுள்ளனர்.

வில்­லியம் சி.கேம்பல் அயர்­லாந்தைச் சேர்ந்­தவர். சதோஷி ஒமுரா ஜப்­பா­னையும், யூயூ டு சீனா­வையும் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

வில்­லியம் சி.கேம்பல் மற்றும் சதோஷி ஆகியோர் உரு­ளைப்­புழு (ரவுண்ட் வோர்ம்) ஒட்­டுண்­ணி­களை முறி­ய­டிக்கும் புதிய முறை சிகிச்­சையைக் கண்­டு­பி­டித்­த­தற்­கா­கவும், யூயூ டு என்­ப­வ­ருக்கு மலே­ரியா நோய்க்­கான புதிய சிகிச்­சையைக் கண்­டு­பி­டித்­த­தற்­கா­கவும் நோபல் பரி­சுகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

கேம்பல் மற்றும் ஒமுரா Avermectin என்ற புதிய மருந்தைக் கண்­டு­பி­டித்­தனர். இத­னை­யொத்த விளை­ம­ருந்­துகள் ரிவர் பிளைண்ட்னெஸ் என்ற கடு­மை­யான சரும நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை பெரு­ம­ளவு குறைக்­கி­றது. ஒட்­டுண்ணி கண்­களைத் தாக்­கினால் பார்வை பறி­போகும் அபா­யமும் இருப்­பதால் இதனை ரிவர் பிளைண்ட்னெஸ் என்று அழைக்­கின்­றனர்.

மேலும் பல ஒட்­டுண்­ணிகள் விளை­வுக்கும் நோய்­க­ளுக்கு எதி­ரா­கவும் இந்த மருந்து செயல்­ப­டு­கி­றது என்று நோபல் அகா­ட­மியின் செய்தி அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. யூயூ டு என்­பவர் Artemisinin என்ற சாதனை மருந்தைக் கண்­டு­பி­டித்தார். மலே­ரியா நோயினால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களை குறிப்­பி­டத்­த­குந்த அளவில் இந்த மருந்து குறைத்­துள்­ளது.

ஒட்­டுண்­ணி­களை பொறுத்­த­வரை helminths என்ற ஒட்­டுண்ணிப் புழுக்கள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்­களைத் தாக்­கு­கி­றது. குறிப்­பாக சப்-­ச­ஹாரா ஆப்­பி­ரிக்கா, தெற்­கா­சியா, மத்­திய மற்றும் தென் அமெ­ரிக்­காவில் இந்த ஒட்­டுண்ணிப் புழுக்­களின் தாக்கம் அதிகம். இத்­த­கைய ஒட்­டுண்­ணி­களால் ரிவர் பிளைண்ட்னெஸ் மற்றும் நிணநீர் ஃபிலா­ரி­யாசிஸ் என்ற யானைக்கால் நோய் போன்ற அபா­ய­க­ர­மான சரும நோய்­களை உரு­வாக்கும் சக்தி கொண்­டது.

இதற்­கான ‘அவர்­மெக்டின்’ என்ற மருந்தை கேம்பல் மற்றும் ஒமுரா கண்­டு­பி­டித்­தது சாதனை கண்­டு­பி­டிப்­பாகக் கரு­தப்­பட்டு நோபல் வழங்கப்­பட்­டுள்­ளது.

அதே போல் உலகின் 3.4 பில்­லியன் மக்கள் மலே­ரியா நோய் தொற்று ஏற்­படும் அபா­யத்தில் இருந்து வரு­கின்­றனர். ஒற்­றை-செல் ஒட்­டுண்­ணி­களால் உரு­வாகும் மலே­ரியா நோய் காய்ச்சல் மேலும் தீவிரமடையும் போது மூளைச் சேதத்தை விளைவிப்பதோடு மரணமும் ஏற்படக்கூடிய அபாயம் மிக்கது. இதனைத் தடுக்கும் ஆர்டெமிசினின் என்ற மருந்தை யூயூ டு கண்டுபிடித்துள்ளார்.

மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு... Reviewed by Author on October 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.