அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கரை பாடசாலையில் பயிலும் 250 மாணவர்களுக்கு லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் உதவி.-Photos


லண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மன்னார் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 250 மாணவர்களுக்கு 4இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் பாதணிகளும் புத்தகப் பைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமே மடுக்கரை.

இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக,

லண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனமாக இலங்கையில் செயற்பட்டுவரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை ஊடாக 250 புத்தகப்பைகளும் 250 பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் சோசை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் றீகன்,

இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் சேவையாளர்களாகிய ப. சுபாஸ்கரன், சி.சிவகாந்தன், கோ. ரூபகாந், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும், கிராம மக்களும் கலந்து கொண்டு மடுக்கரைப் பகுதியில் வறுமையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவித்தனர்.

தனது கோரிக்கையை ஏற்று கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்த நம்பிக்கைஒளி நிறுவனத்தினருக்கும், அதன் இணைப்பாளர் ப.சுபாஸ்கரனுக்கும், நிதி உதவி புரிந்த புலம்பெயர் உறவுகளுக்கும் பாடசாலை சமூகத்தினர் மற்றும் கிராம மக்களின் சார்பில் ஆனந்தன் எம்.பி நன்றிகளை தெரிவித்தார்.








மன்னார் மடுக்கரை பாடசாலையில் பயிலும் 250 மாணவர்களுக்கு லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் உதவி.-Photos Reviewed by NEWMANNAR on November 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.