அண்மைய செய்திகள்

recent
-

தனது உயிரைத் தியாகம் செய்த செந்தூரனுக்கு த.தே.கூ தலை வணங்குகின்றது: செல்வம் அடைக்கலநாதன்


அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செந்தூரனின் தியாகத்தை ஏற்று உடனடியாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினர் பல வகையிலும் அலுத்தங்களை கொடுத்து வந்தனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் கல் நெஞ்சம் போன்று செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லாட்சி அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செந்தூரன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் குறித்த 18 வயது மாணவன் சிந்தித்து வேதனைப்படும் அளவிற்கு இந்த அரசாங்கம் கல்நெஞ்சம் கொண்டு செயற்படுகின்றது.

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான நேற்று இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த தியாகத்தை செய்த மாணவனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலை வணங்குகின்றது.

எனவே பல தரப்பட்டவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு பல அலுத்தங்களை கொடுத்த நிலையில் யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செந்தூரன் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

ஈழ விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தலை வணங்கும் இன்றைய தினத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்த மாணவன் செந்தூரனிற்கும் தலை வணங்குகின்றோம்.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தி உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதன் பேதே இவ்வாறான தியாகங்கள் இனியும் இடம் பெறாமல் பாதுகாக்க முடியும்.

தனது உயிரை தியாகம் செய்த செந்தூரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உயிரைத் தியாகம் செய்த செந்தூரனுக்கு த.தே.கூ தலை வணங்குகின்றது: செல்வம் அடைக்கலநாதன் Reviewed by NEWMANNAR on November 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.