மன்னாரில் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு-Photos
மன்னாரில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது.
நேற்று மாலை முதல் தொடச்சியாக மன்னாரில் மழைபெய்து வருகிறது இதனால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கனிசமாக பாதிக்கபட்டுள்ளது.
இன்று வானிலை அறிக்கையின்படி 108.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மழைநீர் வழிந்தோடாமல் வீதிகளில் தேங்கியிருப்பதனால் அதனை சீர்செய்ய வீதி அபிவிருத்தி திணைக்களம் இயந்திரம் மூலம் வடிகாண்களில் உள்ள அடைப்புக்களை சீர்செய்து வருகின்றது.
பெய்து வரும் மழை தொடர்ந்து பெய்யுமானால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு ஏதுவாக அமையும் என தெரிவிக்கபடுகிறது.
மன்னாரில் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:

No comments:
Post a Comment