அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் கருத்தை வரவேற்கும் தமிழ் மக்கள் பேரவை ...


தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தரப்படுமாயின், தாம் அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறிய கருத்தை வரவேற்பதாக,  தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழு என குறிப்பிடப்பட்டு, வெ ளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தரப்படுமாயின் தாம் அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

கிளிநொச்சியில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தையடுத்து ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய கூட்டமைப்பின் தலைவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் இந்த கருத்தை நாம் வரவேற்கின்றோம்.  அத்துடன் பேரவையின் உப குழுவினால் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபானது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடமும் கையளிக்கப்படும்.

தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள தீர்வுத் திட்ட வரைபு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் கையளிப்பது என்ற தீர்மானம் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போதே எடுக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்குட்பட்ட விதத்தில், பேரவையால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ் மக்களிடம் கொன்டு செல்லப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும். அந்தவகையில் அதற்கு , இறுதி வடிவம் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  என்று நாம் உறுதியாகக் கூறிக் கொள்ளகின்றோம்.



சம்பந்தன் கருத்தை வரவேற்கும் தமிழ் மக்கள் பேரவை ... Reviewed by Author on January 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.