மன்னாரில் ஆரம்ப பாடசாலைகளுக்கு குடி நீர் இணைப்புக்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.(படம்)
தலைமன்னார் ஸ்ரேஸன் பாலர் பாடசாலையில் ஏற்பட்டு வந்த குடி நீர் பிரச்சினைகளை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தீர்த்து வைத்துள்ளார்.
குறித்த பாடசாலைக்கு குடி நீர் வசதி ஏற்படுத்தி தருமாறு மாதர் சங்கம் மற்றும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்தனர்.
-இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் ஒதுக்கீடு செய்த 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த ஆரம்ப பாடசாலைக்கு குடி நீர் இணைப்பு மற்றும் நீர்த்தாங்கி ஆகியவற்றை அமைத்துக் கொடுத்த நிலையில் குறித்த குடி நீர் தொகுதியை இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-இதே வேளை தலைமன்னார் பியர் பள்ளிவாசல் மற்றும் காட்டாஸ்பத்திரி ஆராம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு தலா 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குடி நீர் இணைப்பு மற்றும் நீர்த்தாங்கி ஆகியவற்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அமைத்துக் கொடுத்துள்ள நிலையில் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஆரம்ப பாடசாலைகளுக்கு குடி நீர் இணைப்புக்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
January 27, 2016
Rating:

No comments:
Post a Comment