அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos



இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை (4) இரவு கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி இரண்டு படகுகளில் 8 இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் அவர்களின் படகுகளும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரி வருகை தந்து பார்வையிட்டார்.

மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளின் விசாரனைகளின் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த மீனவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.



தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos Reviewed by NEWMANNAR on January 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.